Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 3930 Likes :
Ingredients
கோழிக்கறித் துண்டுகள் 1 கிலோ பெரிய வெங்காயம் 3 தக்காளி 3 சிகப்பு மிளகாய் 6 இஞ்சி—பூண்டு அரைத்தது 3 தேக்கரண்டி தேங்காய் 1 மூடி தனியாத்தூள் 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு 100 கிராம் சோம்புத்தூள் 3 தேக்கரண்டி சீரகத்தூள் 2 தேக்கரண்டி கிராம்பு 3 பட்டை 2 துண்டு கசகசா 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 200 மில்லி லிட்டர்
Preparation Method
கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துறுவி, துறுவலுடன், முந்திரிப்பருப்பு, கசகசா இவற்றை சேர்த்து வழுவழுப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, மிளகாய் போட்டு தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
அதன்பின் கோழிக்கறித் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
கோழிக்கறி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் — முந்திரிப்பருப்பு — கசகசா கலவையைப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து, உப்பு சரி பார்த்தபின் இறக்கி பரிமாறவும்.